பதினெட்டு சித்தர்கள் கோவில்
சித்தர் என்ற சொல்லுக்கு சித்தி பெற்றவர் என்றும், சிந்தை உடையவர் என்றும் பொருள். சிவத்தை நினைத்து அகக்கண்ணால் கண்டு, தியானித்து தரிசனம் செய்து, ஆத்ம சக்தியை எழுப்பி, செயற்கரிய காரியங்களை செய்வது சித்த மூர்த்திகளது செயலாகும். இச் செயலை சித்து விளையாட்டு என்று ஆன்மீக ஞானிகள் கூறுவர். இன்று பல பிரசித்தி பெற்ற ஸ்தலங்களில் மூலவருக்கு அருகிலேயே சித்தர்கள் சன்னதி இருக்க காணலாம். சித்தர்கள் யோக சமாதி அடைந்த இடங்கள் மகிமை பெற்ற திருத்தலங்களாக விளங்குகின்றன. அந்த சன்னதியில் மனதை ஒருமுகப்படுத்தி இறைவனிடம் வேண்டினால் நினைத்தது நடக்கும், செய்வது வெற்றி பெறும் என்பது ஆன்மீகவாதிகளின் அசைக்க முடியாத நம்பிக்கை. இன்று பழனிமலையின் பிரபலமும், சக்தியும் உலகம் அறிந்த ஒன்றாகும். அந்த ஸ்தலத்தில் நவபாஷானத்தால் குமரன் வடிவேலனை உருவாக்கியவர் யோக சமாதியை விரும்பிய போகர் என்ற சித்தரே. அதே போன்று இன்று உலக மக்கள் திருப்பதி மலை நோக்கி சென்று வருவதற்கும் அந்த ஸ்தலம் உலக பிரசித்தி பெற்றதற்கும் காரணம் அங்குள்ள கொங்கணவர் என்ற சித்தரே. அப்படிப்பட்ட சித்தர்களில் 18 பேர் தலையாய சித்தர்கள் ஆவர். அருளும், அன்பும், சிவமும், அளவற்ற சக்தியையும் ஒருங்கே பெற்றுள்ள அந்த 18 சித்தர்கள் இன்றும் அருள் தரும் சன்னதிகளின் விவரம் இதோ
அருளும், அன்பும், சிவமும், அளவற்ற சக்தியையும் ஒருங்கே பெற்றுள்ள அந்த 18 சித்தர்கள் இன்றும் அருள் தரும் சன்னதிகளின் விவரம் இதோ திருமூலர் - சிதம்பரம் இராமதேவர் - அழகர்மலை அகஸ்தியர் - திருவனந்தபுரம் கொங்கணர் - திருப்பதி கமலமுனி - திருவாரூர் சட்டமுனி - திருவரங்கம் கரூவூரார் - கரூர் சுந்தரனார் - மதுரை வான்மீகர் - எட்டிக்குடி நந்திதேவர் - காசி பாம்பாட்டி சித்தர் - சங்கரன்கோவில் போகர் - பழனி மச்சமுனி - திருப்பரங்குன்றம் பதஞ்சலி - இராமேஸ்வரம் தன்வந்திரி - வைதீஸ்வரன்கோவில் கோரக்கர் - பொய்யூர் குதம்பை சித்தர் - மாயவரம் இடைக்காடர் - திருவண்ணாமலை சக்தி மிகுந்த சித்தர்களை வணங்கி அருள் பெறுக. நலம் பெறுக.
அருளும், அன்பும், சிவமும், அளவற்ற சக்தியையும் ஒருங்கே பெற்றுள்ள அந்த 18 சித்தர்கள் இன்றும் அருள் தரும் சன்னதிகளின் விவரம் இதோ திருமூலர் - சிதம்பரம் இராமதேவர் - அழகர்மலை அகஸ்தியர் - திருவனந்தபுரம் கொங்கணர் - திருப்பதி கமலமுனி - திருவாரூர் சட்டமுனி - திருவரங்கம் கரூவூரார் - கரூர் சுந்தரனார் - மதுரை வான்மீகர் - எட்டிக்குடி நந்திதேவர் - காசி பாம்பாட்டி சித்தர் - சங்கரன்கோவில் போகர் - பழனி மச்சமுனி - திருப்பரங்குன்றம் பதஞ்சலி - இராமேஸ்வரம் தன்வந்திரி - வைதீஸ்வரன்கோவில் கோரக்கர் - பொய்யூர் குதம்பை சித்தர் - மாயவரம் இடைக்காடர் - திருவண்ணாமலை சக்தி மிகுந்த சித்தர்களை வணங்கி அருள் பெறுக. நலம் பெறுக.
உருவ வழிபாட்டை எதிர்த்து சித்தர்கள் பாடிய பாடல்கள் ஏராளம் விக்கிரக வழிபாட்டை வெறுத்து இதோ சிவ வாக்கியர் பாடுகிறார்.
சிவ வாக்கியர்
செங்கலும் கருங்கலும் சிவந்த சாதி ங்கமும்
செம்பிலும் தராவிலும் சிவன் இருப்பன் என்கிறீர்
உம்மதம் அறிந்து நீர் உம்மை நிர் அறிந்த பின்
அம்பலம் நிறைந்தர் ஆடல் பாடல் ஆகுமே!
ஓசை உள்ள கல்லை நீர் உடைத்திரண்டாய் செய்துமே
வாசல் பதித்த கல்லை மழுங்கவே மிதிக்கிறீர்
பூசைக்கு வைத்த கல்ல் பூவும் நீரும் சாத்துகிறீர்
ஈசனுக்கு உகந்த கல் எந்தக்கல்லு சொல்லுமே
நட்ட கல்லை தெய்வம் என்று நாலு புட்பஞ்சாத்தியே
சுற்றி வந்த மொணமொணன்று சொல்லு மந்திரம் ஏதடா
நட்டகல்லும் பேசுமோ நாதன் உள் இருக்கையில்
சுட்ட சட்டி சட்டுவம் கறிச்சுவை அறியுமோ.
சிலை வணக்கத்தை எதிர்த்து இவ்வாறு பாடியவர் சிவ வாக்கியர்.
பத்திரகிரியார் புலம்பல்
உளியிட்ட கல்லு முருப் பிடித்த செஞ்சாந்தும்
புளியிட்ட செம்பும் போற் பொருளாவ தெக்காலம்
என்று பத்திரிக்கிரியார் சிலை வணக்கத்தை கண்டு சீறுகிறார்.
பட்டினத்துப் பிள்ளையார் பாடல்
சொல்னுஞ் சொல்ன் முடிவிலும் வேதச் சுருதியிலும்
அல்னு மாசற்ற வாகாயந் தன்னிலு மாய்ந்து விட்டோர்
இல்லு மன்பரிடத்திலு மிசனிருக்கு மிடங்
கல்னுஞ் செம்பிலுமோ விருப்பானங்கள் கண்ணுதலே
பட்டினத்துப் பிள்ளையாரின் பாடலுக்கு தில்லை திருநகர் ஸ்ரீசாமிநாததேசி கேந்திர சிவ யோகியின் உரை இதோ :
நெற்றியில் கண் கொண்ட எங்கள் நிலமனார் மந்திரங்களிலும் அம்மந்திர முடியாகவும் சதுர் மறைகளாகிய சுருதியாதிகளிலும் அந்த காரத்தும் பரமாகாயத்தும் சிவதத்துவங்களை ஆராய்ந்து சிவத்தை தெளிந்து கலந்து வாழும் பரம நிஷ்டாபாராள் வீற்றிருக்கும் இல்லங்களிலும் அத்தகைய உத்தம அன்பர் கண்மாட்டும் எழுந்தருளியிருப்பதல்லாமல் கல் செம்பு இவைகளிலோ பொருந்தியிருப்பான் இரான் என்றபடி.
அதே பாடலுக்கு அ. மஹாதேவயோகி அவர்கள் நூதன முறையில் அமைத்தெழுதிய தத்துவார்த்த விளக்க உரை இதோ:
எங்களுடைய நெற்றிக் கண்ணினுடைய சுவாமி சிலையிலும் விக்கிரகத்திலுமாந்திரந்தானா எழுந்தருளியிருப்பான்? அங்ஙனமாற்று அவற்றில் மாத்திரமேயல்லாமல் பதத்தினும் பதாந்தமான மந்திரத்திலும் மந்திரமுற்றுமாலையாகக் கொண்ட வேத சுருதியென்னுஞ்கலையினும் இரவிலும் களங்கமில்லாத ஆகாயத்திலும் ஏது பொருளென ஆராய்ந்து ஜீவ கொடிகளையும் தத்துவங்களையும் பொருளல்லவன விடுத்த ஞானிகளின் இருப்பிடமான அருண் மாளிகையிலும் எவர்கள் அன்பர்களோ அவர்களிடத்திலும் எல்லா ஐசுவரியங்களையும் தம்மதாகவுடைய சிவ பெருமானின் இடங்களாகும். பட்டினத்தார் விக்கிரக வழிபாட்டை பழித்து பாடியிருப்பதை இதனால் அறியமுடிகிறது.
குதம்பைச் சித்தர்
கல்னைச் செம்பினைக் கட்டையைக் கும்மிடல்
புல்லறிவாகு மேடிலி குதம்பாய்லி புல்லறிவாகுமேடி
மெய்த்தேவனொன்றென்று வேண்டாத பன்மதம்
பொய் தேவைய்ப் போற்று மேடி குதம்பாய்
பொய்த் தேவைப் போற்றும்
என்று கற்சிலைகளின் வணக்கத்தைக் கண்டித்து குதம்பைச் சித்தர் பாடியுள்ளார்.
சங்கராச்சாரியாரின் உடலறி விளக்கம்
வட்ட மதியிரவிதனைப் பூசிப்போரும்
மண்ணி ங்கம்தனை எடுத்து பூசிப்போரும்
சுட்டவுரு மரச்சிலைகள் பூசிப்போரும்
துய்ய செம்புக் கல்லுருவை பூசிப்போரும்
திட்டமுட னெட்டெழுத்துப் பொருளென் போரும்
சிறந்தவெழுத்தஞ்சுமே பொருளென் போரும்
விட்ட விடந் தனையரியாரிவர் தாமெல்லாம்
விஷ்ணுவென்றும் சிவனென்றும் விளம்புவாரே
என்று சங்கராச்சாரியாரின் உடலறி விளக்கம் 97ம் பாடன் சிலை வணக்காரர்களை சாடியுள்ளார்.
ஞான மதியுள்ளான்
கல்லைப் பிளந்து சிறுசிலையாக்கிக் கண்ணாளர் செய்ததை கண்டுமிருந்து
எல்லைப் பிடாரியிது சிவங்கமென் றேற்றிப்
பணியுடும்பலைலோ பேயன் நானோடா பேயன்
என்று முத்தானந்த சுவாமிகள் தமது ஞான மதியுள்ளான் 25ம் தருவில் குறிப்பிட்டிருக்கிறார்.
அகஸ்தியர் ஞானம்
அண்டராண்டம் கடந்து நின்ற சோதி தானு
மவனிதனிலுடைந்த கல்லமருமோ சொல்
எண்டிசையு மெவ்வுயிரு மான சோதி
இனமரங் கல்லு களியிருப் பாரோதான்
என்று அகஸ்தியர் ஞானம் 56வது பாடல் அறுவிக்கிறது.
பண்ணென் உனக்கான பூசையொரு வடிவிலே
தீர்த்தங்க மூர்த்தியென்று தேடியோடும் தீயரே
சிவ வாக்கியர்
செங்கலும் கருங்கலும் சிவந்த சாதி ங்கமும்
செம்பிலும் தராவிலும் சிவன் இருப்பன் என்கிறீர்
உம்மதம் அறிந்து நீர் உம்மை நிர் அறிந்த பின்
அம்பலம் நிறைந்தர் ஆடல் பாடல் ஆகுமே!
ஓசை உள்ள கல்லை நீர் உடைத்திரண்டாய் செய்துமே
வாசல் பதித்த கல்லை மழுங்கவே மிதிக்கிறீர்
பூசைக்கு வைத்த கல்ல் பூவும் நீரும் சாத்துகிறீர்
ஈசனுக்கு உகந்த கல் எந்தக்கல்லு சொல்லுமே
நட்ட கல்லை தெய்வம் என்று நாலு புட்பஞ்சாத்தியே
சுற்றி வந்த மொணமொணன்று சொல்லு மந்திரம் ஏதடா
நட்டகல்லும் பேசுமோ நாதன் உள் இருக்கையில்
சுட்ட சட்டி சட்டுவம் கறிச்சுவை அறியுமோ.
சிலை வணக்கத்தை எதிர்த்து இவ்வாறு பாடியவர் சிவ வாக்கியர்.
பத்திரகிரியார் புலம்பல்
உளியிட்ட கல்லு முருப் பிடித்த செஞ்சாந்தும்
புளியிட்ட செம்பும் போற் பொருளாவ தெக்காலம்
என்று பத்திரிக்கிரியார் சிலை வணக்கத்தை கண்டு சீறுகிறார்.
பட்டினத்துப் பிள்ளையார் பாடல்
சொல்னுஞ் சொல்ன் முடிவிலும் வேதச் சுருதியிலும்
அல்னு மாசற்ற வாகாயந் தன்னிலு மாய்ந்து விட்டோர்
இல்லு மன்பரிடத்திலு மிசனிருக்கு மிடங்
கல்னுஞ் செம்பிலுமோ விருப்பானங்கள் கண்ணுதலே
பட்டினத்துப் பிள்ளையாரின் பாடலுக்கு தில்லை திருநகர் ஸ்ரீசாமிநாததேசி கேந்திர சிவ யோகியின் உரை இதோ :
நெற்றியில் கண் கொண்ட எங்கள் நிலமனார் மந்திரங்களிலும் அம்மந்திர முடியாகவும் சதுர் மறைகளாகிய சுருதியாதிகளிலும் அந்த காரத்தும் பரமாகாயத்தும் சிவதத்துவங்களை ஆராய்ந்து சிவத்தை தெளிந்து கலந்து வாழும் பரம நிஷ்டாபாராள் வீற்றிருக்கும் இல்லங்களிலும் அத்தகைய உத்தம அன்பர் கண்மாட்டும் எழுந்தருளியிருப்பதல்லாமல் கல் செம்பு இவைகளிலோ பொருந்தியிருப்பான் இரான் என்றபடி.
அதே பாடலுக்கு அ. மஹாதேவயோகி அவர்கள் நூதன முறையில் அமைத்தெழுதிய தத்துவார்த்த விளக்க உரை இதோ:
எங்களுடைய நெற்றிக் கண்ணினுடைய சுவாமி சிலையிலும் விக்கிரகத்திலுமாந்திரந்தானா எழுந்தருளியிருப்பான்? அங்ஙனமாற்று அவற்றில் மாத்திரமேயல்லாமல் பதத்தினும் பதாந்தமான மந்திரத்திலும் மந்திரமுற்றுமாலையாகக் கொண்ட வேத சுருதியென்னுஞ்கலையினும் இரவிலும் களங்கமில்லாத ஆகாயத்திலும் ஏது பொருளென ஆராய்ந்து ஜீவ கொடிகளையும் தத்துவங்களையும் பொருளல்லவன விடுத்த ஞானிகளின் இருப்பிடமான அருண் மாளிகையிலும் எவர்கள் அன்பர்களோ அவர்களிடத்திலும் எல்லா ஐசுவரியங்களையும் தம்மதாகவுடைய சிவ பெருமானின் இடங்களாகும். பட்டினத்தார் விக்கிரக வழிபாட்டை பழித்து பாடியிருப்பதை இதனால் அறியமுடிகிறது.
குதம்பைச் சித்தர்
கல்னைச் செம்பினைக் கட்டையைக் கும்மிடல்
புல்லறிவாகு மேடிலி குதம்பாய்லி புல்லறிவாகுமேடி
மெய்த்தேவனொன்றென்று வேண்டாத பன்மதம்
பொய் தேவைய்ப் போற்று மேடி குதம்பாய்
பொய்த் தேவைப் போற்றும்
என்று கற்சிலைகளின் வணக்கத்தைக் கண்டித்து குதம்பைச் சித்தர் பாடியுள்ளார்.
சங்கராச்சாரியாரின் உடலறி விளக்கம்
வட்ட மதியிரவிதனைப் பூசிப்போரும்
மண்ணி ங்கம்தனை எடுத்து பூசிப்போரும்
சுட்டவுரு மரச்சிலைகள் பூசிப்போரும்
துய்ய செம்புக் கல்லுருவை பூசிப்போரும்
திட்டமுட னெட்டெழுத்துப் பொருளென் போரும்
சிறந்தவெழுத்தஞ்சுமே பொருளென் போரும்
விட்ட விடந் தனையரியாரிவர் தாமெல்லாம்
விஷ்ணுவென்றும் சிவனென்றும் விளம்புவாரே
என்று சங்கராச்சாரியாரின் உடலறி விளக்கம் 97ம் பாடன் சிலை வணக்காரர்களை சாடியுள்ளார்.
ஞான மதியுள்ளான்
கல்லைப் பிளந்து சிறுசிலையாக்கிக் கண்ணாளர் செய்ததை கண்டுமிருந்து
எல்லைப் பிடாரியிது சிவங்கமென் றேற்றிப்
பணியுடும்பலைலோ பேயன் நானோடா பேயன்
என்று முத்தானந்த சுவாமிகள் தமது ஞான மதியுள்ளான் 25ம் தருவில் குறிப்பிட்டிருக்கிறார்.
அகஸ்தியர் ஞானம்
அண்டராண்டம் கடந்து நின்ற சோதி தானு
மவனிதனிலுடைந்த கல்லமருமோ சொல்
எண்டிசையு மெவ்வுயிரு மான சோதி
இனமரங் கல்லு களியிருப் பாரோதான்
என்று அகஸ்தியர் ஞானம் 56வது பாடல் அறுவிக்கிறது.
பண்ணென் உனக்கான பூசையொரு வடிவிலே
தீர்த்தங்க மூர்த்தியென்று தேடியோடும் தீயரே
சிவவாக்கியர் வாழ்க்கை வரலாறு
தாம் பிறக்கும் போதே ‘சிவ சிவ’ என்று உச்சரித்தபடியே பிறந்தமையால் இவரை சிவாக்கியர் என்று அழைத்ததாகக் கூறுவர். இவர் கால தத்துவம், மகா தத்துவம் முதலானவற்றைத் தம் இளம் வயதிலேயே நன்கு உணர்ந்தவர். இவரது பாடல்கலை சரியாக உணராத பலர் இவரை நாத்திகர் என்கின்றனர். இவர் பாடிய
நட்ட கல்லை தெய்வம் என்று புட்பம் சாத்தியே
சுற்றிவந்து மொணமொன என்று சொல்லும் மந்திரம் ஏதடா
நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
சுட்ட சட்டி சட்டுவம் கறிச் சுவை அறியுமோ
என்ற பாடலே பலர் இவரை நாத்திகர் என்று கூறக் காரணமாகும். இப்பாடலின் பொருளை நன்கு உணர்ந்தால் இவர் நாத்திகர் அல்லர் என்ற உண்மை புரிய வரும். அதாவது தரையில் நட்டு வைத்திருக்கும் உணர்ச்சிகள் ஏதுமற்ற கருங்கல்லை தெய்வ வடிவங்களாக வடித்து அதன் மீது பலவித பூக்களைச் சாற்றியும் பலவித மந்திரங்களை மொண மொண என்று முணுமுணுத்தவாறு அத்தெய்வ வடிவைச் சுற்றிச் சுற்றி வந்து வணங்குவதை அத்தெய்வ வடிவம் அறிந்திடுமோ அல்லது அந்தத் தெய்வ வடிவம் உன்னிடம்தான் பேசிடுமோ…. எப்படி கறி சமைக்கப் பயன்படுத்தும் சட்டுவம் கறியின் சுவையை அறியாதோ அதுபோன்றேதான் நீ வணங்கி வழிபடும் வழிபாடும் என்று மட்டுமே பொருள் கொள்கிறார்கள். ஆனால் அந்த பாடலில் இருக்கும் ஒரு வரியை அவர்கள் உணரவில்லை. அது நாதன் உள்ளிருக்கையில் என்பதே ஆகும். சிவ வாக்கியர் ஒரு போதும் கடவுள் இல்லை என்று கூறவே இல்லை. இவ்வாறு நட்டு வைத்த கல்லை தெய்வம் எனக் கருதி வழிபடுவதை விட எல்லாம் வல்ல இறைவனான அந்த நாதன் உன்னுள்ளேயே உள்ளான் என்பதை நீ உணரவேண்டும் என்பதே அவர் இப்பாடலில் கூறிய கருத்தாகும். இதனை நன்கு உணர்ந்தால் அவர் நாத்திகர் என்ற வாதம் தானே விலகிடும்.
காசியம்பதியின் புகழைப் பற்றி அன்று தொட்டு இன்று வரைப் போற்றிக் கூறாதோர் எவருமே இல்லை. அத்தகைய பெருமையை உடைய காசியம்பதி பற்றிச் சிவாக்கியரும் கேள்விப்பட்டு அங்கு சென்று காசி விஸ்வநாதரின் தரிசனத்தைக் காண வேண்டும் என்று ஆசைப்பட்டார். உடனே எத்தயக்கமும் இன்றிப் புறப்பட்ட சிவாக்கியர் பல நாட்களுக்கு பின் காசிக்கு வந்தடைந்தார்.
காசியம்பதிக்குச் சிவாக்கியர் வந்து சேர்ந்த சமயத்தில் அங்கு ஒரு சித்தர் வாழ்ந்து வந்தார். செருப்பு தைக்கும் தொழிலைச் செய்து வந்த அச்சித்தர் தன் மூச்சுக் காற்றினைக் கட்டுப்படுத்தத் தெரிந்தவர். பிராணயாம வித்தைகளில் நன்கு தேர்ச்சி பெற்றவர்.
நற்குணங்கள் பல பெற்ற அச்சித்தர் பெருமானை அறிந்தோர் அவரைப் போற்றி வணங்கி வந்தனர். ஆனால் அவரது பெருமைகளைப் பொறுத்திடாத துன்மார்க்கர் சிலர் அவரை இகழ்ந்து பேசியதுடன் அவர் செய்து வந்த தொழிலையும் இழிவாகப் பேசி வந்தனர். ஆனாலும் அவர், தமக்குக் கிடைத்த பெருமைகளுக்காக மகிழ்ந்திடவும் இல்லை, தூற்றுதலுக்காக வருந்தவும் இல்லை. மேலும் அச்சித்தரது நோக்கம் தனக்கு ஓர் நல்ல சீடனையே எதிர்பார்த்துக் கொண்டிருப்பதுதான்.
சித்தர் பெருமானின் புகழ் காசியம்பதி நகரை வலம் வந்த சிவவாக்கியரை எட்டியதுய அவரைக் கேவலம் செருப்பு தைப்பவர்தானே என்று இழிவாகக் கருதாது அவர் இருக்கும் இடத்தை அடைந்தார். அவரைக் கண்ட உடனே சிவவாக்கியர் அவருடைய மகிமையை மனதார உணர்ந்தார். நல்லதொரு சீடனைத் தேடிய அச்சித்தரும் தம்மை நாடி வந்த சிவவாக்கியரைக் கண்டதுமே, இவர்தான் தாம் தேடிய சீடர் என்பதை உணர்ந்தார். ஆனாலும் சிவவாக்கியரது பக்குவப்பட்ட நிலையை அறிந்திட அவர் விரும்பினார். அதனால் தன் எதிரில் வந்து நின்ற சிவவாக்கியரை அன்போடு வரவேற்றுப் பலகை ஒன்றைச் சுட்டிக் காட்டி அதில் அமருமாறு கூறினார்
சித்தர் பெருமானின் கனிவான பேச்சும் அன்பான உபசரிப்பும் சிவவாக்கியரை அவர்பால் ஈர்த்தன. சித்தர் சுட்டிக் காட்டிய பலகை மீது சிவவாக்கியர் அமர்ந்ததுமே, இவ்வுலகமே தம்மை விட்டு நழுவுவதைப் போன்று உணர்ந்ததுடன் இனம் புரியாத பேரானந்த நிலையைத்தாம் அடைந்ததைப் போன்றும் உணர்ந்தார்.
இவ்வாறு பேரின்ப நிலையில் இருந்த சிவவாக்கியரை நோக்கி அச்சித்தர் தான் செருப்பு தைத்து சம்பாதித்த காசு தன்னிடம் இருப்பதாகவும் அதனைத் தன் தங்கையான கங்கையிடம் கொண்டு சேர்க்குமாறு கூறித் தன்னருகே இருந்த பேய்ச் சுரைக்காயைக் காட்டி, அக்காய் வெகு கசப்பாக இருப்பதாகவும் அதனால் அக்காயின் கசப்பைக் கழுவி வருமாறும் கூறினார்.
சித்தரின் தரிசனம் கண்டதால் பேரின்ப நிலையில் இருந்த சிவவாக்கியர் சித்தரது கூற்றைக் கேட்டதும் அவர் கூறியவாறு நடக்குமா அல்லது அவர் இட்ட பணியைத் தன்னால் செவ்வனே நிறைவேற்ற இயலுமா என்றெல்லாம் சந்தேகம் கொள்ளவில்லை. உடனே சித்தர் தன்னிடம் தந்த காசையும், பேய்ச் சுரையையும் எடுத்துக் கொண்டு கங்கைக் கரைக்கு வந்து சேர்ந்தார்.
சிவவாக்கியர் கங்கைக்கரைக்கு வந்து சேர்ந்ததுமே, பெருஞ்சுழலுடன் வேகமாக ஓடியபடி இருந்த அப்புனித ஆற்றிலிருந்து வளையலணிந்த ஓர் பெண்ணின் கரம் வெளிவந்தது. ஆற்றிலிருந்து வெளிவந்த அக்கரத்தில் சித்தர் தம்மிடம் அளித்த காசுகளை சிவவாக்கியர் வைத்தார். உடனே அக்காசுகளுடன் அந்த வளையலணிந்த பெண்ணின் கரம் ஆற்றினுள் சென்று மறைந்தது. அடுத்து தாம் கொண்டு வந்த பேய்ச் சுரைக்காயையும் ஆற்று நீரில் கழுவி எடுத்துக் கொண்டு சித்தரிடம் சிவவாக்கியர் திரும்பி வந்து அவரைப் பணிந்து நின்றார்.
சிவவாக்கியரின் பக்குவப்பட்ட நிலை அந்த சித்தரைப் பெரிதும் கவர்ந்தது. சிவவாக்கியரிடம் தான் அவசரப்பட்டு விட்டதாகவும், தனது தங்கை மிகவும் வைதீகமானவள். அதனால் தான் வைத்திருக்கும் தோல் பையில் இருக்கும் நீரிலும் அவள் தோன்றுவாள், எனவே கங்கை ஆற்றில் சிவவாக்கியர் கொடுத்த காசை அவளிடம் கேட்டால் அவள் தாமதிக்காது தந்திடுவாள் எனவுரைத்து மீண்டும் சிவவாக்கியரைத் தூண்டினார்.
சித்தரின் கட்டளைப்படியே சிவவாக்கியர் தாம் ஆற்றில் கொடுத்த காசைக் கங்கையிடம் இருந்து திரும்பக் கேட்டார். உடனே சித்தரது தோல் பையில் இருந்த நீரிலிருந்து வளைக்கரம் வெளிவந்து சிவவாக்கியர் தன்னிடம் தந்த காசுகளை அவரிடமே தந்து மறைந்தது. இச்செயல் சிவவாக்கியரின் மனதில் எவ்வித சலனத்தையும் உண்டு பண்ணாத நிலையைக் கண்டு சித்தர். அவரின் பக்குவப் பட்ட நிலையை உணர்ந்தார். அவரை அன்போடு ஆரத்தழுவிய சித்தர் அவருக்கு உபதேசமும் செய்தருளினார்.
மேலும் சித்தர் பெருமான் சிவவாக்கியரிடம் அவர் முக்தி நிலை சித்திக்கும் வரையில் இல்லற வாழ்க்கை வாழுமாறு கூறியதுடன் சிறிதளவு மணலுடன் சிவவாக்கியர் ஆற்றுநீரில் கழுவி எடுத்து பேய்ச் சுரைக்காயையும் கொடுத்து அவற்றைப் பக்குவமாய்ச் சமைத்துத் தந்திடும் பெண்ணைத் திருமணம் செய்து கொள்ளுமாறும் கூறியருளினார்.
தம் குருநாதரின் கட்டளையை ஏற்று வணங்கிய சிவவாக்கியர் தம்மிடம் அவர் தந்த பொருட்களுடன் காசியிலிருந்து புறப்பட்டார்
அவர் செல்லும் வழியெங்கும், தன் குரு உபதேசித்தபடி தவம் இயற்றினார். இச்சாதனையின் பயனாய் கலைமகள் அவரது நாவிலிருந்து நடமிட்டாள். தாம் அனுபவித்து அறிந்த அற்புத விபரங்கள் அனைத்தையும் அரிய பாடல்களாக இயற்றினர்.
அவர் செல்லும் இடங்களில் வாடும் மக்களுக்கு மெய்யறிவைச் சிவவாக்கியர் புகட்டினார். அவர் காட்டியருளிய அறநெறியை ஆங்காங்கே வாழ்ந்த மக்களில் சிலர் அலட்சியம் செய்ததுடன் தூற்றவும் செய்தனர். பெண்களில் சிலர் சிவவாக்கியரின் இளமை ததும்பும் எழிலொடு கூடிய உடலை நோக்கியவாறு இருந்தனர். இவ்வாறு தம்மை நோக்கிய பெண்களிடம் தாம் கொண்டு வந்த மணலையும், பேய்ச்சுரையையும் எவளொருவள் பக்குவமாய்ச் சமைத்துத் தருகிறாளோ அவளைத் தாம் திருமணம் செய்து கொள்ளப் போவதாகக் கூறியதும் இது நடக்க கூடியதா…. என்று ஏளனம் செய்தவாறு அப்பெண்கள் ஒதுங்கிச் சென்றனர். அவ்வாறு ஒதுங்கிச் சென்றிட முயன்ற பெண்களிடம் அவர், எண்ணத்தில் தூய்மை இருக்குமானால் எதையுமே செய்திட இயலும், என்றுரைத்து விட்டுத்தம் பயணத்தைத் தொடர்ந்தார்.
ஒரு நாள் பகல் பொழுதில் சிவவாக்கியர் குறவர் குலத்தவு வாழும் பகுதியை வந்தடைந்தார். அவரது வருகையைக் கண்ட குறவர் குலத்துக் கன்னி ஒருத்து ஏதோ ஒர் தூண்டுதலால் வெளிவந்து அவரைப் பணிந்து வணங்கி நின்றாள். அவளிடம் சிவவாக்கியர் அவளது பெற்றோர் பற்றி வினவினார். அதற்கு அவள், எனது பெற்றோரும் மற்றவர்களும் காட்டில் மூங்கில் வெட்டி எடுத்து வரப் போயுள்ளனர். அவர்கள் வெட்டி எடுத்து வரும் மூங்கில்களைப் பிளந்து கூடை, முறம் முதலானவற்றைச் செய்து விற்றுப் பிழைப்பது எங்கள் குலத் தொழில், எனக் கூறினால். மேலும் அவள் தன் பெற்றோர் அவ்விடத்தில் இல்லாதிருந்தாலும், அவர் இடும் பணி எதுவாயிருந்தாலும் அதனை ஒரு மனதாய்த் தான் முடித்து வைப்பதாகவும் கூறினாள்.
தன்னைப் பணிந்து வணங்கியதுடன் தான் இடும் கட்டளை எதுவாயினும் அதனை ஒருமனதாய் முடித்து வைக்கத் தயாராக இருந்த அக்குறவர் குலத்துக் கன்னியிடம், சிவவாக்கியர், தனக்கு மிகுந்த பசியாக இருப்பதாகவும் தன்னிடம் இருக்கும் மணலையும், பேய்ச் சுரையையும் கொண்டு தனக்கு உணவு சமைத்துத் தர அவளால் முடியுமா? , என்று வினவினார். அது கேட்டதும் அப்பெண் பிற பெண்களைப் போன்று அவரை ஏளனம் செய்து ஒதுக்காது, தன்னிடம் கேட்பது தவமுனிவர். அவர் கூறுவது எதுவாயினும் அதன்படி நடப்பது தனது கடமை என எண்ணிச் சிவவாக்கியர் தன்னிடம் அளித்த பொருள்களைக் கொண்டு சமைக்கத் துவங்கினாள். சற்றுநேரத்தில் எவ்விதக் குறையுமின்றி அவள் சமையலை முடித்துத் தான் சமைத்த உணவை உண்ண சிவவாக்கியரை வணங்கி நின்றாள்.
தான் அவளிடம் தந்த பொருள்கள் இன்னது என அறிந்திருந்தபோதும் ஒரு வார்த்தைகூட எதிர்த்துப் பேசாது தான் உரைத்தபடி செவ்வனே சமையலை முடித்து நிற்கும் இக்கன்னியே தம் குருநாதர் வாக்குப்படி தாம் மணந்து கொள்ள ஏற்ற குலமகளாவாள் என்று உணர்ந்தார்ய பின் அவள் தமக்குப் பரிமாறிய உணவை உண்டு பசியாறிய சிவவாக்கியர் அங்கேயே அமர்ந்து ஓய் வெடுத்தார். மாலைப் பொழுதானது
காட்டிற்க்கு மூங்கில் வெட்டச் சென்றிருந்த அப் பெண்ணின் பெற்றோரும் பிறரும் தங்கள் இருப்பிடத்துக்கு வந்து சேர்ந்தனர். தங்கள் இருப்பிடத்தில் ஓய்வெடுத்தபடி இருந்த சிவவாக்கியரைக் கண்டதும் அவர்கள் பயந்து, சற்று தொலைவில் இருந்தபடியே அவரைப் பணிந்து வணங்கினர்.
இவ்வாறு பணிந்து நின்ற குறவர் குலத்துப் பெண்ணின் பெற்றோரும் மற்றவர்களும் சிவவாக்கியர் தங்கள் இருப்பிடம் தேடி வந்தது தாங்கள் செய்த தவப்பயனே என்று வியந்து அவர் வந்த நோக்கம் அறிந்து கொள்ள வேண்டினர். அதற்கு சிவவாக்கியர் தாம் அப்போதுதான் உணவு அருந்தியதாகவும், தவம் இயற்றும் தமக்குத் துணையாக ஒரு பெண்ணைத் தேடிக் கொண்டு வந்ததாகவும், தாம் கூறியவற்றைக் கேட்டு பெண்களும், மற்றவர்களும் தம்மை ஏளனம் செய்ததாகவும், பொறுமையில் பூமா தேவியை ஒத்திருக்கும் அவர்கள் குலப் பெண்ணோ தாம் வேண்டியதை மறுப்பேதும் கூறாது செய்து கொடுத்ததாகவும், அதனால் அவளைத் தமக்கு குறவர்குல மக்கள் மணம் முடித்துத் தர வேண்டும் என்றும் அவ்வாறு செய்து கொடுப்பதும், மறுப்பதும் அவர்களது விருப்பம் என்றும் கூறினார்.
அவரது கூற்றை கேட்ட அப்பெண்ணின் பெற்றோரும், மற்றவர்களும் தங்கள் குலத்துப் பெண்ணை அவருக்கு மணம் முடித்துத் தருவது தாங்கள் செய்த புண்ணி்யம் என்றும், அவ்வாறு செய்து கொடுப்பதென்றால், சிவவாக்கியர் தங்களுடனேயே வாழ்ந்திட வேண்டும் என்று தயக்கத்துடன் கூறினர். அவர்கள் இட்ட நிபந்தனையோடு கூடிய வேண்டுகோளுக்குச் சிவவாக்கியர் சம்மதித்தார். சிவவாக்கியருக்கும் குறவர் குலக் கன்னிக்கும் இனிதே திருமணம் நடந்து முடிந்தது. தம் குருநாதர் இட்ட கட்டளைப் படியே தமது இல்லறம் அமைந்தது சிவவாக்கியருக்கு மனநிறைவினைத் தந்தது.
இல்லற வாழ்க்கையில் தம் மனைவியோடு சிவவாக்கியர் ஈடுபட்ட போதும், அவர் தமது தவத்தைக் கை விடவில்லை. அவரது மனைவியும் அவரின் தவத்துக்குத் தன்னால் எந்த ஒரு இடையீடும் நேராதபடி நடந்து கொண்டாள். இவ்வாறு இல்லற நெறி என இரண்டிலும் ஈடுபட்டுவந்த சிவவாக்கியர் வெகு விரைவில் அக்குறவர் குலத்தோரின் தொழிலான மூங்கில் கூடை, முறம் முடைதல் போன்றவற்றையும் கற்றுக் கொண்டார். இதனால் அவரது இல்லற வாழ்க்கை சிரமமின்றி நடந்தது.
ஒரு நாள் சிவவாக்கியர் தமது தொழிலுக்காக மூங்கில்களை வெட்ட வேண்டி காட்டுப் பகுதிக்குச் சென்றார். அங்கிருந்த பழமையான மூங்கிலை அவர் வெட்டியதும் அதிலிருந்து தங்கத் துகள்கள் பொடிப் பொடியாகச் சிதறிக் கீழே விழுந்தது. அதைக் கண்டதும் சிவவாக்கியர் திகைத்தார். உடனே அவர் இறைவனை நோக்கித் துதிக்கலானார். தாம் முக்தியை வேண்டிக் கொண்டிருக்கும் போது, அதனைத் தமக்கு இறைவன் அருளாது ஆட்டைக் காட்டி வேங்கையைப் பிடிக்க முயல்வதைப் போன்று இந்தத் தங்கத் துகள்களைத் தமக்குக் காட்டித் தம்மை மதிமயங்கச் செய்வது நியாயமோ….. என்றும், எப்படி வாழ வேண்டும் என்ற நெறியை அறியாதோர் சிதறி விழும் இந்தத் தங்கத் துகள்களைக் கண்டு மதிமயங்கக் கூடும். ஆனால் உழைத்து அதன் மூலம் கிடைக்கும் வருமானத்தைக் கொண்டுதான் வாழ வேண்டும். அதுவே சிறந்த நெறி எனவும், இவ்வாறு ஒருவனிடம் செல்வம் எதிர்பாராது அதிகமாகுமானால் அவனது கவலைகளும் அதிகமாகிடுமே, என்று பயந்து இறைவனிடம் முறையிட்டபடியே சிறிது தொலைவுக்கு ஓடிச் சென்று மூங்கிலிலிருந்து கீழே சிதறி விழும் தங்கத் துகள்களை பயந்த படியே பார்த்தார்
இவ்வாறு பயந்தபடி சிவவாக்கியர் நின்று கொண்டு இருந்தபோது, நான்கு இளைஞர்கள் அவ்வழியே வந்தனர். சிவவாக்கியரைக் கண்டதும் அவர்கள் எதனால் சிவவாக்கியர் அவ்வாறு நின்று கொண்டுள்ளார் என்பதை அறிந்து கொள்ள வேண்டி அவரிடம் வினவினர். அந்த இளைஞர்களிடம், தாம் வெட்டிய மூங்கிலிருந்து தங்கத் துகள்கள் வீழ்வதைக் கூறியபோது, அவை அந்த மூங்கிலிலிருந்து மனித இனத்தையே அழித்திடும் ஆட்கொல்லி வந்து வீழ்ந்து கொண்டுள்ளது. அதைக் கண்டு தாம் பயந்து கொண்டு நிற்பதாகக் கூறி அவர்களுக்குத் தங்கத் துகள்கள் விழும் மூங்கிலையும் காட்டினார்.
சிவவாக்கியர் சுட்டிக் காட்டிய மூங்கிலைக் கண்டதும் இளைஞர்கள் விபரம் புரிந்து, அவரைத் தங்கத்தின் அருமை, மதிப்பு போன்றவற்றை அறியாத பைத்தியக்காரன் என்று எண்ணி நகைத்தனர். பின் அவர்கள் சிவவாக்கியரிடம், ஆம்! அந்த மூங்கிலிலிருந்து ஆட்கொல்லி தான் வீழ்கிறது… நீர் இங்கேயே நின்றால் அந்த ஆட்கொல்லி உம்மையே கொன்றுவிடும்.. என்று பயமுறுத்தினர். அது கேட்ட அவரும் பயந்தபடியே அங்கிருந்து அகன்று சென்றார்.
பயந்தபடி அவர் சென்றதைக் கண்டு அந்த இளைஞர்கள் அவரை எள்ளி நகைத்தபடி அம்மூங்கிலருகே சென்றனர். கீழே சிதறிக் கிடந்த தங்கத் துகள்ககளை அள்ளி மூட்டையாகக் கட்டினர். அவர்கள் அவ்வாறு செய்து முடிப்பதற்குள் இருள் சூழ்ந்தது. இராப் பொழுதில் காட்டு வழியே செல்லப் பயந்த அவர்கள் அங்கேயே தங்கிவிடுவது என்றும், தங்கத்துகள் மூட்டைக்கு இருவர் காவலாக இருப்பது என்றும், மற்ற இருவர் அருகில் உள்ள கிராமத்துக்குச் சென்று இரவு உணவை முடித்து, காவலிருக்கும் இருவருக்கான உணவை வாங்கி வருவது என்றும் முடிவு செய்தனர்.
அதன்படி அவர்களில் இரண்டு பேர் அருகிலிருக்கும் கிராமத்துக்குச் சென்று உணவை உண்டு முடித்து மற்ற இருவருக்கும் உணவை வாங்கினர். அப்போது அவர்கள் காட்டில் கிடைத்த தங்கத் துகள்களை நான்கு பேருமாகப் பங்கிட்டுக் கொள்வதை விட தாங்கள் இருவருமே பங்கிட்டுக் கொண்டால் அதிக அளவு தங்கம் கிடைக்கும் என்று எண்ணினர்.
இந்த தீய எண்ணம் காரணமாய் மற்ற இருவருக்கும் வாங்கிய உணவில் விஷத்தைக் கலந்துச் சென்றனர். அவர்கள் அவ்வுணவை எடுத்துக் கொண்டு வரும்போது, காவலுக்கு இருந்த இருவரது மனதிலும் இதே தீய எண்ணம் உருவானது. அதனால் உணவு வாங்கச் சென்ற இருவரும் திரும்பி வந்ததும் அவர்களை அங்கிருந்த கிணற்றில் தள்ளிக் கொன்றுவிடத் தீர்மானித்தனர்.
உணவுப் பொட்டலங்களோடு வந்த இருவரையும் காவலுக்கு இருந்த இருவரும் வரவேற்று நாங்கள் உணவை உண்ணும் போது குடிக்கத் தண்ணீர் வேண்டும். அதனால் நீங்கள் அருகிலிருகிகும் கிணற்றில் தண்ணீர் எடுத்து வாருங்கள், என்று கூறினர். இவர்களது சூழ்ச்சியை அறியாத அவ்விருவரும் தண்ணீர் கொண்டு வர கிணற்றின் அருகே சென்றனர். அவர்கள் அறியாதபடி பின் தொடந்து சென்று அவர்களைக் கிணற்றுக்குள் தள்ளி அவர்களது கதையை மற்ற இருவரும் திட்டமிட்டபடி முடித்தனர். பின் இருவரும் சந்தோஷமாக தங்களது விதியும் முடியப் போகிறது என்ற உண்மை புரியாது வயிறு புடைக்க உண்டனர். ஆனால் அவ்வுணவில் இருந்த விஷமோ அவர்களின் உயிரைப் பறித்துத் தன் பணியைச் செய்து முடித்தது.
பொழுது புலர்ந்தது
மறுநாள் மூங்கில் வெட்ட வந்த சிவவாக்கியர் தாம் முதல் நாள் மூங்கிலை வெட்டிய இடத்திற்கு வந்தார். அங்கு இளைஞர்கள் நான்கு பேரும் பிணமாகக் கிடப்பதைக் கண்டார். தாம் பயந்தபடியே ஆட்கொல்லியான தங்கத் துகள்கள் அவ்விளைஞர்களைக் கொன்றுவிட்டது எனக் கருதித் தம் வழியேச் சென்று வேறிடத்தில் மூங்கிலை வெட்டி வரச் சென்றார்.
இவ்வாறு தமது இல்லற வாழ்க்கையோடு தவத்திலும் ஈடுபட்டு வந்தார் சிவவாக்கியர். தாம் அன்றாடம் சந்தித்த மக்களது நடவடிக்கைகளைக் கண்டு வேதனைப்பட்ட சிவவாக்கியர் அவ்வப்போது பாடிய பாடல்களே பிற்காலத்தில் தொகுக்கப்பட்டுச் சிவவாக்கியம் என்ற பெயரைப் பெற்றது. திருமழிசை ஆழ்வாரே சிவவாக்கியர் என்று ஒரு சிலரும் ஞானம் பெற வேண்டிய கடுந்தவம் மேற்கொண்ட சிவனடியார் ஒருவர் தம் தவம் முடிவதற்குள் இறந்து விட்டதாகவும் அவரே சிவவாக்கியராக மறுபிறப்பு எடுத்தார் என்று ஒரு சிலரும், கூறுகின்றனர். இக்கூற்றுக்கள் எப்படி இருந்தாலும் சிவவாக்கியரின் வாழ்வில் நடந்த சம்பவங்கள் அவர் நாத்திகரா அல்லது ஆத்திகரா என்பதை நிச்சயம் உலகுக்குத் தெளிவபடுத்தும். இவர் கும்பகோணத்தில் சித்தி அடைந்தார் என்று கூறப்படுகிறது.
தாம் பிறக்கும் போதே ‘சிவ சிவ’ என்று உச்சரித்தபடியே பிறந்தமையால் இவரை சிவாக்கியர் என்று அழைத்ததாகக் கூறுவர். இவர் கால தத்துவம், மகா தத்துவம் முதலானவற்றைத் தம் இளம் வயதிலேயே நன்கு உணர்ந்தவர். இவரது பாடல்கலை சரியாக உணராத பலர் இவரை நாத்திகர் என்கின்றனர். இவர் பாடிய
நட்ட கல்லை தெய்வம் என்று புட்பம் சாத்தியே
சுற்றிவந்து மொணமொன என்று சொல்லும் மந்திரம் ஏதடா
நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
சுட்ட சட்டி சட்டுவம் கறிச் சுவை அறியுமோ
என்ற பாடலே பலர் இவரை நாத்திகர் என்று கூறக் காரணமாகும். இப்பாடலின் பொருளை நன்கு உணர்ந்தால் இவர் நாத்திகர் அல்லர் என்ற உண்மை புரிய வரும். அதாவது தரையில் நட்டு வைத்திருக்கும் உணர்ச்சிகள் ஏதுமற்ற கருங்கல்லை தெய்வ வடிவங்களாக வடித்து அதன் மீது பலவித பூக்களைச் சாற்றியும் பலவித மந்திரங்களை மொண மொண என்று முணுமுணுத்தவாறு அத்தெய்வ வடிவைச் சுற்றிச் சுற்றி வந்து வணங்குவதை அத்தெய்வ வடிவம் அறிந்திடுமோ அல்லது அந்தத் தெய்வ வடிவம் உன்னிடம்தான் பேசிடுமோ…. எப்படி கறி சமைக்கப் பயன்படுத்தும் சட்டுவம் கறியின் சுவையை அறியாதோ அதுபோன்றேதான் நீ வணங்கி வழிபடும் வழிபாடும் என்று மட்டுமே பொருள் கொள்கிறார்கள். ஆனால் அந்த பாடலில் இருக்கும் ஒரு வரியை அவர்கள் உணரவில்லை. அது நாதன் உள்ளிருக்கையில் என்பதே ஆகும். சிவ வாக்கியர் ஒரு போதும் கடவுள் இல்லை என்று கூறவே இல்லை. இவ்வாறு நட்டு வைத்த கல்லை தெய்வம் எனக் கருதி வழிபடுவதை விட எல்லாம் வல்ல இறைவனான அந்த நாதன் உன்னுள்ளேயே உள்ளான் என்பதை நீ உணரவேண்டும் என்பதே அவர் இப்பாடலில் கூறிய கருத்தாகும். இதனை நன்கு உணர்ந்தால் அவர் நாத்திகர் என்ற வாதம் தானே விலகிடும்.
காசியம்பதியின் புகழைப் பற்றி அன்று தொட்டு இன்று வரைப் போற்றிக் கூறாதோர் எவருமே இல்லை. அத்தகைய பெருமையை உடைய காசியம்பதி பற்றிச் சிவாக்கியரும் கேள்விப்பட்டு அங்கு சென்று காசி விஸ்வநாதரின் தரிசனத்தைக் காண வேண்டும் என்று ஆசைப்பட்டார். உடனே எத்தயக்கமும் இன்றிப் புறப்பட்ட சிவாக்கியர் பல நாட்களுக்கு பின் காசிக்கு வந்தடைந்தார்.
காசியம்பதிக்குச் சிவாக்கியர் வந்து சேர்ந்த சமயத்தில் அங்கு ஒரு சித்தர் வாழ்ந்து வந்தார். செருப்பு தைக்கும் தொழிலைச் செய்து வந்த அச்சித்தர் தன் மூச்சுக் காற்றினைக் கட்டுப்படுத்தத் தெரிந்தவர். பிராணயாம வித்தைகளில் நன்கு தேர்ச்சி பெற்றவர்.
நற்குணங்கள் பல பெற்ற அச்சித்தர் பெருமானை அறிந்தோர் அவரைப் போற்றி வணங்கி வந்தனர். ஆனால் அவரது பெருமைகளைப் பொறுத்திடாத துன்மார்க்கர் சிலர் அவரை இகழ்ந்து பேசியதுடன் அவர் செய்து வந்த தொழிலையும் இழிவாகப் பேசி வந்தனர். ஆனாலும் அவர், தமக்குக் கிடைத்த பெருமைகளுக்காக மகிழ்ந்திடவும் இல்லை, தூற்றுதலுக்காக வருந்தவும் இல்லை. மேலும் அச்சித்தரது நோக்கம் தனக்கு ஓர் நல்ல சீடனையே எதிர்பார்த்துக் கொண்டிருப்பதுதான்.
சித்தர் பெருமானின் புகழ் காசியம்பதி நகரை வலம் வந்த சிவவாக்கியரை எட்டியதுய அவரைக் கேவலம் செருப்பு தைப்பவர்தானே என்று இழிவாகக் கருதாது அவர் இருக்கும் இடத்தை அடைந்தார். அவரைக் கண்ட உடனே சிவவாக்கியர் அவருடைய மகிமையை மனதார உணர்ந்தார். நல்லதொரு சீடனைத் தேடிய அச்சித்தரும் தம்மை நாடி வந்த சிவவாக்கியரைக் கண்டதுமே, இவர்தான் தாம் தேடிய சீடர் என்பதை உணர்ந்தார். ஆனாலும் சிவவாக்கியரது பக்குவப்பட்ட நிலையை அறிந்திட அவர் விரும்பினார். அதனால் தன் எதிரில் வந்து நின்ற சிவவாக்கியரை அன்போடு வரவேற்றுப் பலகை ஒன்றைச் சுட்டிக் காட்டி அதில் அமருமாறு கூறினார்
சித்தர் பெருமானின் கனிவான பேச்சும் அன்பான உபசரிப்பும் சிவவாக்கியரை அவர்பால் ஈர்த்தன. சித்தர் சுட்டிக் காட்டிய பலகை மீது சிவவாக்கியர் அமர்ந்ததுமே, இவ்வுலகமே தம்மை விட்டு நழுவுவதைப் போன்று உணர்ந்ததுடன் இனம் புரியாத பேரானந்த நிலையைத்தாம் அடைந்ததைப் போன்றும் உணர்ந்தார்.
இவ்வாறு பேரின்ப நிலையில் இருந்த சிவவாக்கியரை நோக்கி அச்சித்தர் தான் செருப்பு தைத்து சம்பாதித்த காசு தன்னிடம் இருப்பதாகவும் அதனைத் தன் தங்கையான கங்கையிடம் கொண்டு சேர்க்குமாறு கூறித் தன்னருகே இருந்த பேய்ச் சுரைக்காயைக் காட்டி, அக்காய் வெகு கசப்பாக இருப்பதாகவும் அதனால் அக்காயின் கசப்பைக் கழுவி வருமாறும் கூறினார்.
சித்தரின் தரிசனம் கண்டதால் பேரின்ப நிலையில் இருந்த சிவவாக்கியர் சித்தரது கூற்றைக் கேட்டதும் அவர் கூறியவாறு நடக்குமா அல்லது அவர் இட்ட பணியைத் தன்னால் செவ்வனே நிறைவேற்ற இயலுமா என்றெல்லாம் சந்தேகம் கொள்ளவில்லை. உடனே சித்தர் தன்னிடம் தந்த காசையும், பேய்ச் சுரையையும் எடுத்துக் கொண்டு கங்கைக் கரைக்கு வந்து சேர்ந்தார்.
சிவவாக்கியர் கங்கைக்கரைக்கு வந்து சேர்ந்ததுமே, பெருஞ்சுழலுடன் வேகமாக ஓடியபடி இருந்த அப்புனித ஆற்றிலிருந்து வளையலணிந்த ஓர் பெண்ணின் கரம் வெளிவந்தது. ஆற்றிலிருந்து வெளிவந்த அக்கரத்தில் சித்தர் தம்மிடம் அளித்த காசுகளை சிவவாக்கியர் வைத்தார். உடனே அக்காசுகளுடன் அந்த வளையலணிந்த பெண்ணின் கரம் ஆற்றினுள் சென்று மறைந்தது. அடுத்து தாம் கொண்டு வந்த பேய்ச் சுரைக்காயையும் ஆற்று நீரில் கழுவி எடுத்துக் கொண்டு சித்தரிடம் சிவவாக்கியர் திரும்பி வந்து அவரைப் பணிந்து நின்றார்.
சிவவாக்கியரின் பக்குவப்பட்ட நிலை அந்த சித்தரைப் பெரிதும் கவர்ந்தது. சிவவாக்கியரிடம் தான் அவசரப்பட்டு விட்டதாகவும், தனது தங்கை மிகவும் வைதீகமானவள். அதனால் தான் வைத்திருக்கும் தோல் பையில் இருக்கும் நீரிலும் அவள் தோன்றுவாள், எனவே கங்கை ஆற்றில் சிவவாக்கியர் கொடுத்த காசை அவளிடம் கேட்டால் அவள் தாமதிக்காது தந்திடுவாள் எனவுரைத்து மீண்டும் சிவவாக்கியரைத் தூண்டினார்.
சித்தரின் கட்டளைப்படியே சிவவாக்கியர் தாம் ஆற்றில் கொடுத்த காசைக் கங்கையிடம் இருந்து திரும்பக் கேட்டார். உடனே சித்தரது தோல் பையில் இருந்த நீரிலிருந்து வளைக்கரம் வெளிவந்து சிவவாக்கியர் தன்னிடம் தந்த காசுகளை அவரிடமே தந்து மறைந்தது. இச்செயல் சிவவாக்கியரின் மனதில் எவ்வித சலனத்தையும் உண்டு பண்ணாத நிலையைக் கண்டு சித்தர். அவரின் பக்குவப் பட்ட நிலையை உணர்ந்தார். அவரை அன்போடு ஆரத்தழுவிய சித்தர் அவருக்கு உபதேசமும் செய்தருளினார்.
மேலும் சித்தர் பெருமான் சிவவாக்கியரிடம் அவர் முக்தி நிலை சித்திக்கும் வரையில் இல்லற வாழ்க்கை வாழுமாறு கூறியதுடன் சிறிதளவு மணலுடன் சிவவாக்கியர் ஆற்றுநீரில் கழுவி எடுத்து பேய்ச் சுரைக்காயையும் கொடுத்து அவற்றைப் பக்குவமாய்ச் சமைத்துத் தந்திடும் பெண்ணைத் திருமணம் செய்து கொள்ளுமாறும் கூறியருளினார்.
தம் குருநாதரின் கட்டளையை ஏற்று வணங்கிய சிவவாக்கியர் தம்மிடம் அவர் தந்த பொருட்களுடன் காசியிலிருந்து புறப்பட்டார்
அவர் செல்லும் வழியெங்கும், தன் குரு உபதேசித்தபடி தவம் இயற்றினார். இச்சாதனையின் பயனாய் கலைமகள் அவரது நாவிலிருந்து நடமிட்டாள். தாம் அனுபவித்து அறிந்த அற்புத விபரங்கள் அனைத்தையும் அரிய பாடல்களாக இயற்றினர்.
அவர் செல்லும் இடங்களில் வாடும் மக்களுக்கு மெய்யறிவைச் சிவவாக்கியர் புகட்டினார். அவர் காட்டியருளிய அறநெறியை ஆங்காங்கே வாழ்ந்த மக்களில் சிலர் அலட்சியம் செய்ததுடன் தூற்றவும் செய்தனர். பெண்களில் சிலர் சிவவாக்கியரின் இளமை ததும்பும் எழிலொடு கூடிய உடலை நோக்கியவாறு இருந்தனர். இவ்வாறு தம்மை நோக்கிய பெண்களிடம் தாம் கொண்டு வந்த மணலையும், பேய்ச்சுரையையும் எவளொருவள் பக்குவமாய்ச் சமைத்துத் தருகிறாளோ அவளைத் தாம் திருமணம் செய்து கொள்ளப் போவதாகக் கூறியதும் இது நடக்க கூடியதா…. என்று ஏளனம் செய்தவாறு அப்பெண்கள் ஒதுங்கிச் சென்றனர். அவ்வாறு ஒதுங்கிச் சென்றிட முயன்ற பெண்களிடம் அவர், எண்ணத்தில் தூய்மை இருக்குமானால் எதையுமே செய்திட இயலும், என்றுரைத்து விட்டுத்தம் பயணத்தைத் தொடர்ந்தார்.
ஒரு நாள் பகல் பொழுதில் சிவவாக்கியர் குறவர் குலத்தவு வாழும் பகுதியை வந்தடைந்தார். அவரது வருகையைக் கண்ட குறவர் குலத்துக் கன்னி ஒருத்து ஏதோ ஒர் தூண்டுதலால் வெளிவந்து அவரைப் பணிந்து வணங்கி நின்றாள். அவளிடம் சிவவாக்கியர் அவளது பெற்றோர் பற்றி வினவினார். அதற்கு அவள், எனது பெற்றோரும் மற்றவர்களும் காட்டில் மூங்கில் வெட்டி எடுத்து வரப் போயுள்ளனர். அவர்கள் வெட்டி எடுத்து வரும் மூங்கில்களைப் பிளந்து கூடை, முறம் முதலானவற்றைச் செய்து விற்றுப் பிழைப்பது எங்கள் குலத் தொழில், எனக் கூறினால். மேலும் அவள் தன் பெற்றோர் அவ்விடத்தில் இல்லாதிருந்தாலும், அவர் இடும் பணி எதுவாயிருந்தாலும் அதனை ஒரு மனதாய்த் தான் முடித்து வைப்பதாகவும் கூறினாள்.
தன்னைப் பணிந்து வணங்கியதுடன் தான் இடும் கட்டளை எதுவாயினும் அதனை ஒருமனதாய் முடித்து வைக்கத் தயாராக இருந்த அக்குறவர் குலத்துக் கன்னியிடம், சிவவாக்கியர், தனக்கு மிகுந்த பசியாக இருப்பதாகவும் தன்னிடம் இருக்கும் மணலையும், பேய்ச் சுரையையும் கொண்டு தனக்கு உணவு சமைத்துத் தர அவளால் முடியுமா? , என்று வினவினார். அது கேட்டதும் அப்பெண் பிற பெண்களைப் போன்று அவரை ஏளனம் செய்து ஒதுக்காது, தன்னிடம் கேட்பது தவமுனிவர். அவர் கூறுவது எதுவாயினும் அதன்படி நடப்பது தனது கடமை என எண்ணிச் சிவவாக்கியர் தன்னிடம் அளித்த பொருள்களைக் கொண்டு சமைக்கத் துவங்கினாள். சற்றுநேரத்தில் எவ்விதக் குறையுமின்றி அவள் சமையலை முடித்துத் தான் சமைத்த உணவை உண்ண சிவவாக்கியரை வணங்கி நின்றாள்.
தான் அவளிடம் தந்த பொருள்கள் இன்னது என அறிந்திருந்தபோதும் ஒரு வார்த்தைகூட எதிர்த்துப் பேசாது தான் உரைத்தபடி செவ்வனே சமையலை முடித்து நிற்கும் இக்கன்னியே தம் குருநாதர் வாக்குப்படி தாம் மணந்து கொள்ள ஏற்ற குலமகளாவாள் என்று உணர்ந்தார்ய பின் அவள் தமக்குப் பரிமாறிய உணவை உண்டு பசியாறிய சிவவாக்கியர் அங்கேயே அமர்ந்து ஓய் வெடுத்தார். மாலைப் பொழுதானது
காட்டிற்க்கு மூங்கில் வெட்டச் சென்றிருந்த அப் பெண்ணின் பெற்றோரும் பிறரும் தங்கள் இருப்பிடத்துக்கு வந்து சேர்ந்தனர். தங்கள் இருப்பிடத்தில் ஓய்வெடுத்தபடி இருந்த சிவவாக்கியரைக் கண்டதும் அவர்கள் பயந்து, சற்று தொலைவில் இருந்தபடியே அவரைப் பணிந்து வணங்கினர்.
இவ்வாறு பணிந்து நின்ற குறவர் குலத்துப் பெண்ணின் பெற்றோரும் மற்றவர்களும் சிவவாக்கியர் தங்கள் இருப்பிடம் தேடி வந்தது தாங்கள் செய்த தவப்பயனே என்று வியந்து அவர் வந்த நோக்கம் அறிந்து கொள்ள வேண்டினர். அதற்கு சிவவாக்கியர் தாம் அப்போதுதான் உணவு அருந்தியதாகவும், தவம் இயற்றும் தமக்குத் துணையாக ஒரு பெண்ணைத் தேடிக் கொண்டு வந்ததாகவும், தாம் கூறியவற்றைக் கேட்டு பெண்களும், மற்றவர்களும் தம்மை ஏளனம் செய்ததாகவும், பொறுமையில் பூமா தேவியை ஒத்திருக்கும் அவர்கள் குலப் பெண்ணோ தாம் வேண்டியதை மறுப்பேதும் கூறாது செய்து கொடுத்ததாகவும், அதனால் அவளைத் தமக்கு குறவர்குல மக்கள் மணம் முடித்துத் தர வேண்டும் என்றும் அவ்வாறு செய்து கொடுப்பதும், மறுப்பதும் அவர்களது விருப்பம் என்றும் கூறினார்.
அவரது கூற்றை கேட்ட அப்பெண்ணின் பெற்றோரும், மற்றவர்களும் தங்கள் குலத்துப் பெண்ணை அவருக்கு மணம் முடித்துத் தருவது தாங்கள் செய்த புண்ணி்யம் என்றும், அவ்வாறு செய்து கொடுப்பதென்றால், சிவவாக்கியர் தங்களுடனேயே வாழ்ந்திட வேண்டும் என்று தயக்கத்துடன் கூறினர். அவர்கள் இட்ட நிபந்தனையோடு கூடிய வேண்டுகோளுக்குச் சிவவாக்கியர் சம்மதித்தார். சிவவாக்கியருக்கும் குறவர் குலக் கன்னிக்கும் இனிதே திருமணம் நடந்து முடிந்தது. தம் குருநாதர் இட்ட கட்டளைப் படியே தமது இல்லறம் அமைந்தது சிவவாக்கியருக்கு மனநிறைவினைத் தந்தது.
இல்லற வாழ்க்கையில் தம் மனைவியோடு சிவவாக்கியர் ஈடுபட்ட போதும், அவர் தமது தவத்தைக் கை விடவில்லை. அவரது மனைவியும் அவரின் தவத்துக்குத் தன்னால் எந்த ஒரு இடையீடும் நேராதபடி நடந்து கொண்டாள். இவ்வாறு இல்லற நெறி என இரண்டிலும் ஈடுபட்டுவந்த சிவவாக்கியர் வெகு விரைவில் அக்குறவர் குலத்தோரின் தொழிலான மூங்கில் கூடை, முறம் முடைதல் போன்றவற்றையும் கற்றுக் கொண்டார். இதனால் அவரது இல்லற வாழ்க்கை சிரமமின்றி நடந்தது.
ஒரு நாள் சிவவாக்கியர் தமது தொழிலுக்காக மூங்கில்களை வெட்ட வேண்டி காட்டுப் பகுதிக்குச் சென்றார். அங்கிருந்த பழமையான மூங்கிலை அவர் வெட்டியதும் அதிலிருந்து தங்கத் துகள்கள் பொடிப் பொடியாகச் சிதறிக் கீழே விழுந்தது. அதைக் கண்டதும் சிவவாக்கியர் திகைத்தார். உடனே அவர் இறைவனை நோக்கித் துதிக்கலானார். தாம் முக்தியை வேண்டிக் கொண்டிருக்கும் போது, அதனைத் தமக்கு இறைவன் அருளாது ஆட்டைக் காட்டி வேங்கையைப் பிடிக்க முயல்வதைப் போன்று இந்தத் தங்கத் துகள்களைத் தமக்குக் காட்டித் தம்மை மதிமயங்கச் செய்வது நியாயமோ….. என்றும், எப்படி வாழ வேண்டும் என்ற நெறியை அறியாதோர் சிதறி விழும் இந்தத் தங்கத் துகள்களைக் கண்டு மதிமயங்கக் கூடும். ஆனால் உழைத்து அதன் மூலம் கிடைக்கும் வருமானத்தைக் கொண்டுதான் வாழ வேண்டும். அதுவே சிறந்த நெறி எனவும், இவ்வாறு ஒருவனிடம் செல்வம் எதிர்பாராது அதிகமாகுமானால் அவனது கவலைகளும் அதிகமாகிடுமே, என்று பயந்து இறைவனிடம் முறையிட்டபடியே சிறிது தொலைவுக்கு ஓடிச் சென்று மூங்கிலிலிருந்து கீழே சிதறி விழும் தங்கத் துகள்களை பயந்த படியே பார்த்தார்
இவ்வாறு பயந்தபடி சிவவாக்கியர் நின்று கொண்டு இருந்தபோது, நான்கு இளைஞர்கள் அவ்வழியே வந்தனர். சிவவாக்கியரைக் கண்டதும் அவர்கள் எதனால் சிவவாக்கியர் அவ்வாறு நின்று கொண்டுள்ளார் என்பதை அறிந்து கொள்ள வேண்டி அவரிடம் வினவினர். அந்த இளைஞர்களிடம், தாம் வெட்டிய மூங்கிலிருந்து தங்கத் துகள்கள் வீழ்வதைக் கூறியபோது, அவை அந்த மூங்கிலிலிருந்து மனித இனத்தையே அழித்திடும் ஆட்கொல்லி வந்து வீழ்ந்து கொண்டுள்ளது. அதைக் கண்டு தாம் பயந்து கொண்டு நிற்பதாகக் கூறி அவர்களுக்குத் தங்கத் துகள்கள் விழும் மூங்கிலையும் காட்டினார்.
சிவவாக்கியர் சுட்டிக் காட்டிய மூங்கிலைக் கண்டதும் இளைஞர்கள் விபரம் புரிந்து, அவரைத் தங்கத்தின் அருமை, மதிப்பு போன்றவற்றை அறியாத பைத்தியக்காரன் என்று எண்ணி நகைத்தனர். பின் அவர்கள் சிவவாக்கியரிடம், ஆம்! அந்த மூங்கிலிலிருந்து ஆட்கொல்லி தான் வீழ்கிறது… நீர் இங்கேயே நின்றால் அந்த ஆட்கொல்லி உம்மையே கொன்றுவிடும்.. என்று பயமுறுத்தினர். அது கேட்ட அவரும் பயந்தபடியே அங்கிருந்து அகன்று சென்றார்.
பயந்தபடி அவர் சென்றதைக் கண்டு அந்த இளைஞர்கள் அவரை எள்ளி நகைத்தபடி அம்மூங்கிலருகே சென்றனர். கீழே சிதறிக் கிடந்த தங்கத் துகள்ககளை அள்ளி மூட்டையாகக் கட்டினர். அவர்கள் அவ்வாறு செய்து முடிப்பதற்குள் இருள் சூழ்ந்தது. இராப் பொழுதில் காட்டு வழியே செல்லப் பயந்த அவர்கள் அங்கேயே தங்கிவிடுவது என்றும், தங்கத்துகள் மூட்டைக்கு இருவர் காவலாக இருப்பது என்றும், மற்ற இருவர் அருகில் உள்ள கிராமத்துக்குச் சென்று இரவு உணவை முடித்து, காவலிருக்கும் இருவருக்கான உணவை வாங்கி வருவது என்றும் முடிவு செய்தனர்.
அதன்படி அவர்களில் இரண்டு பேர் அருகிலிருக்கும் கிராமத்துக்குச் சென்று உணவை உண்டு முடித்து மற்ற இருவருக்கும் உணவை வாங்கினர். அப்போது அவர்கள் காட்டில் கிடைத்த தங்கத் துகள்களை நான்கு பேருமாகப் பங்கிட்டுக் கொள்வதை விட தாங்கள் இருவருமே பங்கிட்டுக் கொண்டால் அதிக அளவு தங்கம் கிடைக்கும் என்று எண்ணினர்.
இந்த தீய எண்ணம் காரணமாய் மற்ற இருவருக்கும் வாங்கிய உணவில் விஷத்தைக் கலந்துச் சென்றனர். அவர்கள் அவ்வுணவை எடுத்துக் கொண்டு வரும்போது, காவலுக்கு இருந்த இருவரது மனதிலும் இதே தீய எண்ணம் உருவானது. அதனால் உணவு வாங்கச் சென்ற இருவரும் திரும்பி வந்ததும் அவர்களை அங்கிருந்த கிணற்றில் தள்ளிக் கொன்றுவிடத் தீர்மானித்தனர்.
உணவுப் பொட்டலங்களோடு வந்த இருவரையும் காவலுக்கு இருந்த இருவரும் வரவேற்று நாங்கள் உணவை உண்ணும் போது குடிக்கத் தண்ணீர் வேண்டும். அதனால் நீங்கள் அருகிலிருகிகும் கிணற்றில் தண்ணீர் எடுத்து வாருங்கள், என்று கூறினர். இவர்களது சூழ்ச்சியை அறியாத அவ்விருவரும் தண்ணீர் கொண்டு வர கிணற்றின் அருகே சென்றனர். அவர்கள் அறியாதபடி பின் தொடந்து சென்று அவர்களைக் கிணற்றுக்குள் தள்ளி அவர்களது கதையை மற்ற இருவரும் திட்டமிட்டபடி முடித்தனர். பின் இருவரும் சந்தோஷமாக தங்களது விதியும் முடியப் போகிறது என்ற உண்மை புரியாது வயிறு புடைக்க உண்டனர். ஆனால் அவ்வுணவில் இருந்த விஷமோ அவர்களின் உயிரைப் பறித்துத் தன் பணியைச் செய்து முடித்தது.
பொழுது புலர்ந்தது
மறுநாள் மூங்கில் வெட்ட வந்த சிவவாக்கியர் தாம் முதல் நாள் மூங்கிலை வெட்டிய இடத்திற்கு வந்தார். அங்கு இளைஞர்கள் நான்கு பேரும் பிணமாகக் கிடப்பதைக் கண்டார். தாம் பயந்தபடியே ஆட்கொல்லியான தங்கத் துகள்கள் அவ்விளைஞர்களைக் கொன்றுவிட்டது எனக் கருதித் தம் வழியேச் சென்று வேறிடத்தில் மூங்கிலை வெட்டி வரச் சென்றார்.
இவ்வாறு தமது இல்லற வாழ்க்கையோடு தவத்திலும் ஈடுபட்டு வந்தார் சிவவாக்கியர். தாம் அன்றாடம் சந்தித்த மக்களது நடவடிக்கைகளைக் கண்டு வேதனைப்பட்ட சிவவாக்கியர் அவ்வப்போது பாடிய பாடல்களே பிற்காலத்தில் தொகுக்கப்பட்டுச் சிவவாக்கியம் என்ற பெயரைப் பெற்றது. திருமழிசை ஆழ்வாரே சிவவாக்கியர் என்று ஒரு சிலரும் ஞானம் பெற வேண்டிய கடுந்தவம் மேற்கொண்ட சிவனடியார் ஒருவர் தம் தவம் முடிவதற்குள் இறந்து விட்டதாகவும் அவரே சிவவாக்கியராக மறுபிறப்பு எடுத்தார் என்று ஒரு சிலரும், கூறுகின்றனர். இக்கூற்றுக்கள் எப்படி இருந்தாலும் சிவவாக்கியரின் வாழ்வில் நடந்த சம்பவங்கள் அவர் நாத்திகரா அல்லது ஆத்திகரா என்பதை நிச்சயம் உலகுக்குத் தெளிவபடுத்தும். இவர் கும்பகோணத்தில் சித்தி அடைந்தார் என்று கூறப்படுகிறது.
நவநாத சித்த தரிசனம் கண்ட போகர்
அகஸ்திய முனிவர் போக சித்தரை சீன தேசத்தவர் என்று கூறுகிறார். புலிப்பாணியின் குரு என்றும் இவருடைய தாய் தந்தையர் சீனாவில் பெண்களுக்குத் துணிகள் வெளுத்துக் கொடுத்துப் பிழைத்து வந்தனர் என்றும் அகத்தியர் கூறுகிறார்.
போகர் திருமூலர் காலத்தினைச் சேர்ந்தவரென்றும் பழனி மலையில் வசித்து பழனி தண்டபாணி சிலையை நவபாஷானக் கட்டில் தயாரித்தார் என்றும் அவருடைய வரலாறு பேசப்படுகிறது.
போக முனிவர் தமிழில் ஏராளமான நூல்களை இயற்றியிருந்த போதும் அவற்றைவிட அதிகமாக சீன மொழியில் எழுதியுள்ளார்.
அகத்தியர் தமது சௌமிய சாகரத்தில் போகர் இயற்றிய நூலின் பட்டியலைத் தருகிறார்.
1. போகர் – 12,000
2. சப்த காண்டம் – 7000
3. போகர் நிகண்டு – 1700
4. போகர் வைத்தியம் – 1000
5. போகர் சரக்கு வைப்பு – 800
6. போகர் ஜெனன சாகரம் – 550
7. போகர் கற்பம் – 360
8. போகர் உபதேசம் – 150
9. போகர் இரண விகடம் – 100
10. போகர் ஞானசாராம்சம் – 100
11. போகர் கற்ப சூத்திரம் – 54
12. போகர் வைத்திய சூத்திரம் – 77
13. போகர் மூப்பு சூத்திரம் – 51
14. போகர் ஞான சூத்திரம் – 37
15. போகர் அட்டாங்க யோகம் – 24
16. போகர் பூஜாவிதி – 20
இவைகளில் போகர் 12000 மற்றும் இரண வாகடம் நூல்கள் கிடைக்கவில்லை. போகரின் நூல்கள் யாவுமே அமுதமாகும் என்று காக புஜண்டர் தமது பெருநூல் காவியம் 144வது பாடலில் கூறியுள்ளார். போக சித்தருக்கு 63 சீடர்கள் இருந்தனர்.
இறந்தவர்களைப் பிழைக்க வைக்கும் சஞ்சீவினி மந்திர சக்தியைப் பெற மேருமலையின் அருகிலிருக்கும் நவநாத சித்தர்கள் சமாதியை அடைந்தார். ஒன்பது சித்தர்களும் போகருக்கு தரிசனம் தந்தனர். போகரும் இறந்தவர்களைப் பிழைக்க வைக்கும் சஞ்சீவினி மந்திரவித்தையைக் கற்றுத் தருமாறு கேட்டார்.
“தகுதியுள்ளவர்களுக்கு காயகல்ப முறையைச் சொல்லிக்கொடு அவர்களை நீண்ட காலம் வாழவை. மரணமடைந்தவர்களுக்காக மனதைக் குழப்பிக் கொள்ளாதே” என்று அறிவுரை கூறினர். அதுவரையில் போகர் அறிந்திராத காய கல்ப முறைகளையும் கற்றுக் கொடுத்து மறைந்தனர்.
போகர் தன் கால் போன போக்கில் நடந்து கொண்டிருந்தார். கொஞ்ச தூரத்தில் ஒரு புற்றிலிருந்து ஒளிக் கற்றை ஒன்று புலப்பட்டது. அந்த ஒளியை தொடர்ந்து புற்றின் முன் போய் நின்றார். யாரோ ஒரு சித்தர் இந்தப் புற்றின் உள்ளே தம் செய்து கொண்டிருக்கிறார் என்பதை உணர்ந்த போகர், அந்தப் புற்றை வலம் வந்து அதன் அருகிலேயே ஆசனம் போட்டு அமர்ந்து கண்களை மூடித் தியானத்தில் ஆழ்ந்தார். நீண்ட நேரம் ஆனது, போகரின் தியானத்தால் புற்றில் இருந்த சித்தரின் தியானம் கலைந்தது. உடனே அவர் புற்றை உடைத்துக் கொண்டு வெளியில் வந்தார்.
போகர், “தங்களை தரிசித்ததில் வாழ்வின் பெரும்பயனை அடைந்தேன்” என்று கூறினார். சித்தர் அங்கிருந்த மரங்களில் ஒன்றைக் காட்டி “போகா! அந்த மரத்தின் பழங்களில் ஒன்றைச் சாப்பிட்டால் போதும் ஆயுள் முழுவதும் பசிக்காது, முடி நரைக்காது, பார்வை மங்காது, இவ்வளவு ஏன்? எல்லோருக்கும் அச்சம் தரும் முதுமை என்பதும் வரவே வராது. தவம் செய்பவர்க்கு ஏற்ற துணை செய்யும்” என்றார். போகர் அந்தப் பழத்தைச் சாப்பிட்டார். பழத்தின் சுவையில் தன்னையும் மறந்தார்.
சித்தர் புலித்தோல் ஆசனம் ஒன்றைக் கொடுத்து, “இது உனக்கு தவம் செய்ய உதவும்” என்றார். அந்த சமயத்தில் பதுமை ஒன்று அவர் எதிரில் தோன்றவே “போகா! இனி உனக்கு தேவையானவைகளை இந்த பதுமை சொல்லும்!” என்று சொல்லிவிட்டு மறுபடியும் தியானத்தில் மூழ்கி விட்டார். பதுமை மூலிகை ரகசியங்கள், போகருக்கு உயிரின் தோற்றம், அது உடல் எடுக்கும் விதம், அந்த உடலில் அது படும் துன்பம் ஆகிய நிலைகளைத் தெளிவாக உணர்த்தியது. அதைக் கேட்டு ஆச்சரியத்தில் இருக்கும் போது பதுமை வந்தது போலவே மறைந்தும் விட்டது.
பொதிகை மலைச்சாரலில் போகர் தங்கியிருந்த போது ஒரு நாள் இரவு உணவு சமைத்து உண்ட பின் நீர் வேட்கையால் அருகிலிருந்த சிற்றூருக்குச் சென்றார். ஒரு வீட்டுத் திண்ணையில் கும்பலாக அந்தணர்கள் அமர்ந்து வேதம் ஓதிக் கொண்டிருந்தனர். போகர் அவர்களிடம் தாகத்திற்கு தண்ணீர் கேட்டார்.
“யார் நீ! அப்பாலே போ! அருகில் வந்தாலே நாற்றமடிக்கிறது” என்று எரிந்து விழுந்தனர். போகர் அவர்களின் அறியாமையைக் கண்டு அவர்களுக்கு பாடம் புகட்ட நினைத்து அந்த வழியாக வந்த பூனை ஒன்றின் காதில் போகர் வேதத்தை ஓதிவிட்டார். பூனை நன்றாக உட்கார்ந்து கொண்டு உரத்த குரலில் வேதத்தை ஓதத் தொட்ங்கியது.
அந்தணர்கள் தாங்கள் அறியாமல் செய்த அவமதிப்பை பொறுத்தருளும்படி வேண்டினர். “ஐயனே எங்கள் வறுமை அகல தாங்கள் வழி செய்ய வேண்டும்” என்றும் வேண்டிக் கொண்டனர்.
போகர் அவர்களுடைய வீடுகளில் இருந்த உலோகங்களால் ஆன பொருட்களை எல்லாம் தன்னிடம் இருந்த ஆதி ரசத்தால் பொன்னாக மாற்றி அவர்களை மகிழ்வித்தார்.
போகர் தவம் செய்து முடித்த இரச மணிக் குளிகைகளின் ஆற்றல் கண்டு மிகவும் வியப்படைந்தார். அதே போல குளிகைகளைச் செய்து மற்ற சித்தர்களுக்கும் அளிக்க வேண்டுமென்று ஆவல் கொண்டார்.
அதற்காக ரோமாபுரி சென்று மிகத் தூய்மையான ஆதி ரசம் கொண்டு வர வேண்டுமென்று நினைத்தார். உடனே குளிகைகளில் ஒன்றை வாயில் போட்டுக் கொண்டு ரோமாபுரியில் தோண்றி அங்கு இருந்த இரசக் கிணற்றைத் தேடிப் பிடித்தார். இரசத்தை சுரைக் குடுவையில் நிரப்பிக் கொண்டு விண்ணில் தாவினார்.
அதன்பிறகு ஆதிரசத்துடன் விண்மார்க்கமாக பொதிகை மலைக்கு வந்து சேர்ந்தார்.
தஞ்சையில் பிரகதீசுவரர் ஆலய லிங்கப் பிரதிஷ்டைக்காக காக்கையின் கழுத்தில் ஓலை ஒன்றை கருவூராருக்கு அனுப்பினார். கருவூரானும் அதன் படியே செய்து லிங்கப் பிரதிட்டை செய்து முடித்தார்.
போகர், தட்சிணா மூர்த்தி உமைக்கு அருளிச் செய்த ஞான விளக்கம் ஏழு சட்சத்தையும் ஏழு காண்டமாக்கி தமது மாணவர்களுக்கு உபதேசித்தார். மற்ற சித்தர்கள், “இறைவன் உபதேசித்ததை வெளியில் சொல்வது குற்றம்” என்று கூறி இத்தகைய செயலை அவர் உடனே நிறுத்தியாக வேண்டும்” என்று தட்சிணாமூர்த்தியிடம் முறையிட்டனர்.
தட்சிணாமூர்த்தி போகரை அழைத்து விசாரிக்க ஆரம்பித்தார். “போகரே! நீர் பூனைக்கு நான்கு வேதங்களையும் உபதேசித்து ஓதச் செய்தீர், சிங்கத்திற்கு ஞானம் கொடுது அரசனாக்கினீர், மேருமலைக்குச் சென்று தாதுக்களைக் கொண்டு வந்தீர், ரோமபுரி சென்று ஆதிரசம் கொண்டு வந்தீர், இதையெல்லாம் விட நாம் உமாதேவிக்கு கூறிய தீட்சை விதி, யோக மார்க்கம் எல்லாவற்றையும் ஏழு காண்டமாக உருவாக்கியுள்ளீராமே! நீர் செய்த நூலைச் சொல்வீராக” எனக் கேட்டு போகரின் நூலாழத்தினையும் பொருட்சிறப்பையும் உணர்ந்து மகிழ்ந்து வாழ்த்தினார்.
போகர் பழனி மலையில் கடும் தவத்தில் ஈடுபடத்துவங்கினார். அவருடைய தவத்தின் பயனாக முருகப் பெருமான் அவர்முன் காட்சியளித்தார். அப்பொழுது போகரிடம், முருகப்பெருமான் பழனி மலையில் தன்னை மூலவராக வடிவமைத்து விக்கிரகமாகச் செய்து அதை எப்படி பிரதிஷ்டை செய்ய வேண்டும் என்பதையும் கூறி காரியசித்தி உபாயத்தையும் சொல்லி மறைந்தார்.
போகர் கனவில் முருகப்பெருமான் சொன்னபடியே நவபாஷாணம் என்னும் ஒன்பது விதமான கூட்டுப்பொருட்களைக் கொண்டு பழனி ஆண்டவர் தண்டாயுதபாணி சிலையைச் செய்து முடித்து அவர் சொன்ன வண்ணமே பிரதிஷ்டை செய்தார். பழனிமலை இறைவன் திருமேனியைத் தழுவி ஊறி வந்த பஞ்சாமிர்தத்தையே உணவாகக் கொண்டார். ஒன்பது விதமான விஷங்களை (நவ பாஷாணங்கள்) முயன்று கூட்டி உருவாக்கிய திருமேனியில் ஊறிய விபூதியும், பஞ்சாமிர்தமும் போகருக்கு உள்ளொளியைப் பெருக்கியது.
இதே மாதிரியான நவபாஷாண மூர்த்தியான திருச்செங்கோடு அர்த்த நாரீஸ்வரனை உருவாக்கியவரும் போகரே என்றும் கூறுவதுண்டு.
பழனியில் சிலகாலம் வாழ்ந்த போகர் அங்கேயே சமாதியடைந்தார். அவரது சமாதி பழனி ஆண்டவர் ஆலயத்தின் உட்பிரகாரத்தின் தென்மேற்கு மூலையில் உள்ளது.
போகர் பூசித்து வந்த புவனேச்வரி அம்மையின் திருவுருவம் பழனியாண்டவர் சந்நிதியில் இன்றும் உள்ளது. போகரின் சமாதி அமைந்துள்ள இடத்திற்கும் புவனேச்வரி அம்மன் சந்நதிக்கும் இடையே சுரங்கப் பாதை ஒன்றிருப்பதாக கூறப்படுகிறது.
இங்கு கூறப்பட்ட வரலாற்று செய்திகளனைத்தும் சதுர கிரி தலப்புராணத்தில் கூறப்பட்டவை.
தியானச்செய்யுள்
சிவிகை ஏந்தி, சிரம் தாழ்த்தும் சித்தர் பெருமக்களுக்கு;
மூலிகை மேனியாய் பேரருள் புரியும் போகர் பெருமானே;
சிவபாலனுக்கு சீவன் தந்த சித்த ஒளியே;
நவபாசாணத்து நாயகனே உங்கள் அருள் காக்க காக்க…
மகா போகர் சித்தர் பூசை முறைகள்:
தேக சுத்தியுடன் அழகிய சிறு பலகையில் மஞ்சளிட்டு மெழுகி, பக்தியுடன் கோலமிட்டு, அதன்மேல் ஸ்ரீ மகா போகர் சித்தர் படத்தை வைத்து அதன்முன் மஞ்சள், குங்குமம் இட்டு, அலங்கரிக்கப்பட்ட குத்து விளக்கில் தீபமேற்ற வேண்டும். முதலில் இந்த சித்தருக்காகக் குறிப்பட பட்டிருக்கும் தியானச் செய்யுளைக் கண்மூடி மனமுருகக் கூறி ஜாதி புஷ்பம், சாமந்திப்பூ, அல்லது சம்பங்கிப்பூ, கதிர்பச்சை கொண்டு பின்வரும் பதினாறு போற்றிகளைக் கூறி அர்ச்சனை செய்ய வேண்டும்.
பதினாறு போற்றிகள்
1. முருகனைக் குருவாகக் கொண்டவரே போற்றி!
2. சித்த வைத்தியத்தின் மூலவரே போற்றி!
3. மகா முனிவர்களால் பூஜிக்கப்படுவரே போற்றி!
4. ப்ரணவ ள்வரூபமாக இருப்பவரே போற்றி!
5. மயில் வாகனனை தரிசனம் செய்தவரே போற்றி!
6. மலைகளில் சஞ்சரிப்பவரே போற்றி!
7. மூலிகை, புஷ்பங்களால் அர்ச்சிக்கப்படுபவரே போற்றி!
8. ஆம், ஊம் என்ற பீஜக்ஷரங்களில் வசிப்பவரே போற்றி!
9. பசும்பால் பிரியரே போற்றி!
10. நவபாஷாணம் அறிந்தவரே போற்றி!
11. ப்ரணவத்தில் பிரியமுள்ளவரே போற்றி!
12. நாக தேவதைகளால் பூஜிக்கப்படுபவரே போற்றி!
13. உலகத்தைக் காப்பாற்றுபவரே போற்றி!
14. கிரிவலத்தில் பிரியமுள்ளவரே போற்றி!
15. சூட்சுமமாக சஞ்சரிப்பவரே போற்றி!
16. முருகனை தரிசனம் செய்த ஸ்ரீ மகாபோகர் சித்தர் சுவாமிகளே போற்றி! போற்றி!
இவ்வாறு பதினாறு போற்றிகளிஅயும் கூறி அர்ச்சித்த பிறகு மூல மந்திரமான “ஓம் ஆம் ஊம் ஸ்ரீ மகா போகர் சித்தர் சுவாமியே போற்றி!” என்று 108 முறை செபிக்க வேண்டும். பின்பு நிவேதனமாக பால் பழம் தண்ணீர் வைத்து உங்கள் பிரார்த்தனையை மனமுருகக் கூற வேண்டும். நிறைவாக தீப ஆராதனை செய்யவும்.
ஸ்ரீ போகரின் பூசை முறைகள்
இவர் நவக்கிரகத்தில் செவ்வாய் கிரகத்தைப் பிரதிபலிப்பவர். ஜாதகத்தில் 1,2,4,7,8,12 ஆம் இடத்தில் செவ்வாய் கிரகம் இருந்தால் செவ்வாய் தோஷத்தினால் நிலத்தகராறும், சகோதர சகோதரிகளுக்குள் உட்பூசல்களும் ஏற்பட வாய்ப்பு உண்டு. ஸ்ரீ மகா போகர் பழனி தண்டாயுதபாணியை நவ பாஷானத்தால் உருவாக்கி பிரதிஷ்டை செய்தவர். இவரை வழிபட்டால் செவ்வாய் கிரகத்தின் அருள் கிடைத்து கீழ்கண்ட பலன்கள் கிடைக்கும்.
1. நிலத்தகராறு, சொத்து தகராறு, வழக்குகள் இவற்றின் பிரச்சினைகள் தீர்ந்து வெற்றி கிடைக்கும்.
2. சொந்த வீடு, நிலம் இல்லாதவர்களுக்கு அவை கிட்டும்.
3. அடுக்குமாடிக் கட்டிடங்கள், ரியல் எஸ்டேட் வியாபாரிகளுக்கு ஏற்படும் தடைகள் அகன்று வியாபாரம் பெருகும்.
4. கட்டிடப் பொருட்கள் வியாபாரிகள், கிரானைட் ஏற்றுமதி, இறக்குமதி செய்பவர்களின் தொழில் தடை நீங்கி அதிக லாபம் கிடைக்கும்.
5. செவ்வாய் தோஷத்தினால் திருமணம் ஆகாமல் இருந்தால், திருமணத் தடை நீங்கி நல்ல இடத்தில் திருமணம் நடக்கும்.
6. பழனி தண்டாயுதபாணியின் அருள் கிடைத்து உடம்பில் உள்ள இரத்த சம்பந்தப்பட்ட நோய்கள் அகலும். புத்திர பாக்கியம் கிடைக்கும்.
7. அரசியலில் பெரும் வெற்றி கிடைக்கும்.
8. இவருக்கு சிவப்பு வஸ்திரம் அணிவித்து அவருக்கு செவ்வரளி புஷ்பங்களால் பூஜை செய்தால் நினைத்த காரியம் நிறைவேறும்.